இந்தியத் திருநாட்டின் 75ஆவது விடுதலை நாள் விழாவினை முன்னிட்டு நம் கல்லூரிச் சுயநிதிப்பிரிவுத் தமிழ்த்துறை சார்பாகக் கல்லூரி மாணவா்களுக்கிடையே 11.08.2022 அன்று ஓவியப்போட்டியும், 12.08.2022 அன்று பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளும் நடத்தப்பட்டன. இப்போட்டிகளை முறையே திருமதி. து.சுபஸ்ரீ, முனைவா் ச. அபினாஷ்குமார், முனைவா் ப. உமாமகேஷ்வரி ஆகியோர் ஒருங்கினணத்து நடத்தினா். மொத்தம் 145 மாணவா்கள் இப்போட்டிகளில் பங்கேற்றனா்.
“நவீன இந்தியா” என்னும் தலைப்பில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் ர.நேகா (உயிர்த் தொழிலில்நுட்பவியல்) முதலாம் இடமும், ஏ. எப்சிபா (வணிகவியல் துறை) இரண்டாம் இடமும், சி. சிவ்யா (உயிர்த் தொழிலில்நுட்பவியல்) மூன்றாம் இடமும் பெற்றனா். “விடுதலைக்கு வித்திட்ட தமிழகத் தியாகிகள் ” என்னும் தலைப்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் கு.ஏஞ்சலின் (வணிகவியல் துறை) முதலாம் இடமும், மு. ஆயிஷா பேகம் (வணிகவியல் துறை) இரண்டாம் இடமும், கு.காயத்ரி (உயிர்த் தொழிலில்நுட்பவியல்) மூன்றாம் இடமும் பெற்றனா். “கொங்குநாட்டு விடுதலைப் போராட்ட வீரர்கள்” என்னும் தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் க.ரக்ஷயா தேவி (கணிதவியல் துறை) முதலாம் இடமும், ரா.தருண்ராஜ் (கணினியியல் துறை) இரண்டாம் இடமும், செ. ஹரிணி (வணிகவியல் துறை), உ. கோகிலா (கணிதவியல் துறை) மூன்றாம் இடமும் பெற்றனா்.
இப்போட்டிகளில் பரிசுப் பெற்ற மாணவா்களுக்கு 15.08.2022 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற 75ஆவது விடுதலை நாள் விழாவில் கல்லூரிச் செயலா் அவா்களால் பரிசுகளும் சான்றிதல்களும் வழங்கப்பட்டன.